×

எமதர்மன் வேடமணிந்து கொரோனா விழிப்புணர்வு

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், வாணியம்பாடியில் 360 பேர்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலலை கட்டுப்படுத்த கலெக்டர் சிவனருள் தலைமையில் மாவட்ட நிர்வாகம்  கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, மாவட்ட மகளிர் திட்டம் ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் உதவி திட்ட அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் நாட்டுப்புற கலைஞசர்கள் மூலம் எமதர்மன் மற்றும் கருப்பசாமி வேடங்கள் அணிந்து வாணியம்பாடி பேருந்து நிலையம், சி.எல்.சாலை, பி.ஜே.என் நேரு சாலை, முகமது அலி பஜார், ஆற்றுமேடு உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் என என அனைவரிடமும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதில், நகராட்சி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags : Corona, Awareness
× RELATED யானை தாக்கி விவசாயி பலி