×

சுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களை நிறுத்த மு.க.ஸ்டாலினுக்கு 67 ஆர்வலர்கள் கடிதம்

சென்னை: ஓய்வு பெற்ற நீதிபதி பரந்தாமன், முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி, சுற்றுச்சூழல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் வெற்றிமாறன் உட்பட 67 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு இன்னும் வலிமையான சட்டங்களை நிறைவேற்றி மத்திய சட்டங்களில் இல்லாத தகுந்த சூழலியல் மேற்பார்வையை கொண்டு வர வேண்டும்.
* வேதாந்தா காப்பர் ஆலையை திறக்கக்கூடாது. அந்த கம்பெனி மற்றும் அதன் இயக்குனர்கள் மீது சுற்றுசூழல் குற்றங்களுக்கு குற்றவியல் வழக்குகள் தொடரப்பட வேண்டும்.
* சுற்றுச்சூழலை சீரழிக்கும் சேலம்-சென்னை எட்டு அரசு வழிச் சாலை திட்டம், காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம், கன்னியாகுமரி சர்வதேச கொள்கலன் முனையம், சித்தூர்-தச்சூர் 6 வழிச்சாலை திட்டம் மற்றும் கூடங்குளத்தில் அமைக்கப்படவிருக்கும் நான்கு அணு உலைகள் ஆகியவற்றை நிறுத்த வேண்டும்.
* வேடந்தாங்கல் சரணாலயத்தில் எல்லை குறைப்பு மற்றும் பழவேற்காடு சரணாலயத்தில் பாதுகாப்புக்கு உட்பட்ட இடைப்பகுதியை குறைப்பதற்கு முந்தைய அரசின் கோரிக்கைகளை திரும்ப பெற
வேண்டும்.
* இந்துஸ்தான் யூனிலெவரின் பாதரச கழிவுகள் கொண்ட கொடைக்கானல் தொழிற்சாலை பகுதி சர்வதேச தரநிலைகளை பின்பற்றி தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.
* மரபணு மாற்று விதைகளை அனுமதிக்காதீர்.
* டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் சுரண்டலுக்கு எதிரான உறுதி மொழியை வலிமைப்படுத்துதல். அனைத்து டெல்டா மாவட்டங்கள் மற்றும் அனைத்து ஹைட்ரோ கார்பன் நடவடிக்கைகளையும் உள்ளடக்குதல், சுத்திரிப்பு மற்றும் செயலாக்கம். உட்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை திட்டங்கள் தொடர்பாக பொது ஆலோசனை மற்றும் சுற்றுச்சூழல் முடிவெடுப்பதில் பங்கேற்பதை வலுப்படுத்த வேண்டும். நாங்கள் சூழலியல் நீதிக்கான அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நிலையிலும், சிவில் சமூகத்தின் உறுப்பினர்களாக எங்கள் கண்காணிப்பு பணிகளை தொடருவோம்.

Tags : MK Stalin , 67 activists letter to MK Stalin to stop plans to destroy the environment
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...