×

மீண்டெழுவாய் இந்தியா...! பீட்டர்சன் உருக்கம்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தலைவிரித்தாடுகிறது. கடந்த 10 தினங்களாக நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவினால் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இந்த கொடூரமான துயரத்தில் ஐபிஎல் போட்டிகள் ஒரு பெரிய ஆறுதலாக இருந்து வந்ததோடு, யாரும் அனாவசியமாக வெளியில் செல்வதையும் ஓரளவுக்கு தடுத்து வந்தது. வீட்டிலேயே அமர்ந்திருக்க சீரியல்களும் ஐபிஎல் கிரிக்கெட்டும் உதவின. ஆனால் ஐபிஎல் வீரர்களின் பயோ-பபுள் என்ற உயிர்ப்பாதுகாப்பு வலையத்தையும் உடைத்துக் கொண்டு கொரோனா வீரர்களை, உதவிப் பணியாளர்களை, பயிற்சியாளரை தாக்கத் தொடங்கியது, நேற்று காலை விருத்திமான் சஹாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.

இதனையடுத்து வீரர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் பெங்களூர் அணி வீரர் கெவின் பீட்டர்சன் கூறியிருப்பதாவது: நான் மிகவும் நேசிக்கும் ஒரு தேசம் இப்படி துயரத்தில் வீழ்ந்திருப்பதைப் பார்க்கும் போது என் இதயம் நொறுங்குகிறது, நிச்சயம் இந்தியா இதனைக் கடந்து வந்து விடும். இதிலிருந்து மீளும் போது இன்னும் வலுவான தேசமாக மீண்டெழுவாய் இந்தியா... இந்த நெருக்கடி காலத்திலும் உனது அன்பும், பெருந்தன்மையும் கவனிக்கப்படாமல் போய் விடாது. இன்கிரெடிபிள் இந்தியா என்று பதிவிட்டுள்ளார்.

Tags : India , India will rise again ...! Peterson melting
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...