வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு பகுதியில் கூமாப்பட்டி, கான்சாபுரம், பிளவக்கல் அணை, மகாராஜபுரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை விவசாயத்திற்கு அடுத்தபடியாக நெல் விவசாயம் பிரதானமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால். நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி சாய்ந்து சேதமடைந்துள்ளது. எனவே மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை வேளாண்மைத்துறை அதிகாாிகள் பாா்வையிட்டு, உாிய நிவாரணம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.