டெல்லி: கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவுவதால் இந்திய பொருளாதாரத்துக்கு புதிய சோதனைகள் வந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த் தாஸ் கூறியுள்ளார். உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்காமல் இருக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.