சென்னை: சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி காலமானார். உடல்நலக்குறைவால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். ஆரம்ப காலத்தில் பாரிமுனையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தபோலீசுக்கு உதவி செய்தார் ராமசாமி. கடந்த 20 ஆண்டுகளாக பொதுநல வழக்குகள் மூலம் பல பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றவர் ராமசாமி.