×

மதுரவாயல் அம்மா உணவகத்தில் தாக்குதல்: இருவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் தாக்குதல் நடத்திய திமுகவினர் இருவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் இருந்த பெயர் பலகைகளை   திமுகவை சேர்ந்த இருவர் சேதப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இதையடுத்து, பல்வேறு தரப்பினரும் இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். 


இந்தநிலையில், மதுரவாயல் பகுதியில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையை நீக்கிய திமுகவை சேர்ந்த 2 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்து திமுக தலைவர் உத்தரவிட்டார். உணவகத்தின் பெயர் பலகையை மீண்டும் அதே இடத்தில் பொருத்தவும், 2 பேர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இரவர் மீது போலீவார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 



Tags : Madurawal ,BC ,Q. ,Stalin , Mom at the restaurant, attack, two, action, MK Stalin
× RELATED ஒரு ஜீவனைவிட மற்றொரு ஜீவன் உயர்ந்தது அல்ல!!