×

தூத்துக்குடியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 54 வயதான ஆண் உயிரிழப்பு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். காரைக்காலில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் நேற்று உயிரிழந்த நிலையில் இன்று தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 9 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 54 வயதான பார்த்திபன் என்பவருக்கு சோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. கடந்த மாதம் 23-ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பார்த்திபனுக்கு இணை நோய் பாதிப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. தியேட்டர், வணிக வளாகம், கடைகள் உள்ளிட்ட கூட்டம் நிறைந்த இடங்களில் மாஸ்க் அணியுங்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் இன்று கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்ற பார்த்திபன் என்பவர் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பார்த்திபன் கொரோனா அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

The post தூத்துக்குடியில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 54 வயதான ஆண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Tuticorin ,Karaikal ,
× RELATED தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று...