×

விருதுநகரில் கனமழையால் சாலைகளில் வெள்ளம்

விருதுநகர்: விருதுநகரில் கடந்த மாத இறுதியில் தொடர்ந்து 3 நாட்கள் மழை பெய்த நிலையில், கடந்த சிலநாட்களாக வெயில் வாட்டி எடுத்ததால் புழுக்கத்தில் மக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். நேற்று முன்தினம் இரவு 6.30 மணியளவில் திடீரென சூறாவளி காற்றுடன் மழை பெய்து குளிர்ந்தது.
இந்நிலையில் நேற்று காலை 8.50 மணியளவில் திடீரென கனமழை பெய்தது.

திடீரென பெய்த கனமழையால் அலுவலகங்கள் செல்லுவோர் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். 30 நிமிடம் பெய்த கனமழையால் வீதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விருதுநகரில் பழைய பஸ் நிலையம், அக்ரஹாரம் தெரு, ரயில்வேபீடர் ரோடு, சாத்தூர் ரோடு பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
நேற்று காலை மழை பெய்த நிலையிலும் புழுக்கம் தொடர்ந்து மழை பெய்வதற்கான அறிகுறிகள் நிலவின. இரவு மற்றும் காலையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags : Wuruthur , Virudhunagar, heavy rain
× RELATED விருதுநகரில் 2-ம் நிலை காவலர் உடல்...