×

பொள்ளாச்சி அருகே பாம்பு தீண்டி மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்டவர் பிழைத்ததால் வியப்பு..!!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே பாம்பு தீண்டி மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்டவர் பாம்பு கடி சிகிச்சை மையத்தில் உயிர் பிழைத்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே தனியார் சோலார் நிறுவனத்தில் பணிபுரிபவர் 24 வயது பொறியாளர் லியாகத். இவர் முதுகில் காட்டுவீரியன் பாம்பு கடித்துள்ளது. உடனடியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனை அடுத்தடுத்து இரு நாட்களில் வெவ்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளின் அளிக்க சிகிச்சை பலனின்றி மூளை செயலிழப்பு ஏற்பட்டது. எனினும் நம்பிக்கை இழக்காத குடும்பத்தினர் ஈரோட்டில் உள்ள பாம்பு கடி சிகிச்சை மையத்தில் லியாகத்தை சேர்த்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் அவர் நலமடைந்து வீடு திரும்பியதால் ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post பொள்ளாச்சி அருகே பாம்பு தீண்டி மூளைச்சாவு அடைந்ததாக கூறப்பட்டவர் பிழைத்ததால் வியப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Pollachi ,Snake Bite Treatment Center ,
× RELATED பொள்ளாச்சி அருகே விஏஓ தற்கொலை: 2 பேர் மீது வழக்கு