×

திருமாவளவன் பேட்டி சமூக நீதிக்கான மண் என்பதை மக்கள் உறுதி செய்துள்ளனர்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் கூறியதாவது: இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை தோற்கடிப்பதற்காக பாஜவும், அதிமுகவும் எத்தனையோ தில்லு முல்லுகளை செய்தன. மத உணர்வுகளை தூண்டிவிட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தன. அனைத்து சதிகளையும் முறியடித்து அவர்களை புறம் ஒதுக்கிவிட்டு தமிழக மக்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மகத்தான ஆதரவை நல்கி மகுடம் சூட்டியிருக்கிறார்கள். தமிழகம் சமூக நீதிக்கான மண். பெரியார் மண் என்பதை மக்கள் உறுதி செய்துள்ளனர். முதல்வராக பொறுப்பேற்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா பேரிடரில் இருந்து தமிழகத்தை காப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறினார்.

Tags : Thirumavalavan , People have confirmed that the Thirumavalavan interview is the soil for social justice
× RELATED ஸ்டாலினின் தேர்தல் வியூகம் மோடியை நடுங்க வைத்துள்ளது; திருமாவளவன் பேச்சு