×

முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது லோடுவேன் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது

துவரங்குறிச்சி, ஏப்.4: மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே தடுப்புச் சுவரில் மோதிய லோடுவேன் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர், கிளீனர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் கோபால்(55). இவர் புதுச்சேரியில் இருந்து தேங்காய் எண்ணெய் கேன்களை லோடு வேனில் ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சிக்கு புறப்பட்டு வந்துகொண்டிருந்தார். அவருடன் கிளீனரும் வந்தார். .

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை கருங்குளம் பிரிவு சாலையில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லோடு வேன் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதியது. இதில் சாலையோரத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சரக்கு வேன் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடியது .இந்த விபத்தில் டிரைவர் கோபால் மற்றும் கிளீனர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். அவர்கள் 2 பேரையும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நவாசுதீன் மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post முன்பக்க சக்கரம் கழன்று ஓடியது லோடுவேன் 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது appeared first on Dinakaran.

Tags : Duwarankurichi ,Vaiyampatti ,Manaparai ,Dinakaran ,
× RELATED மணப்பாறையில் சிப்காட் பணியாளர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி