×

நகராட்சி அலுவலகத்தை பூட்டி கவுன்சிலர் போராட்டத்தால் பரபரப்பு

சிவகங்கை, ஏப்.4: சிவகங்கை நகராட்சி அலுவலகத்தை பூட்டி கவுன்சிலர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை நகராட்சி 15வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் அன்புமணி. இவர் சிவகங்கை நகர் அமமுக நகர் செயலாளராகவும் உள்ளார். நேற்று பிற்பகலில் அன்புமணி சிவகங்கை நகராட்சியின் கதவுகளை பூட்டி கதவின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது: சிவகங்கை நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு போதுமான இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். இது குறித்து கலெக்டரிடம் நகராட்சி தலைவர் தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் சென்று கேட்டும் இதுவரை இடம் ஒதுக்கப்படவில்லை.

இதனால் நகர் முழுவதும் தெருக்களில் குப்பைகள் தேங்குகின்றன. அனைத்து தெருக்களுக்கும் முறையாக குடிநீர் வழங்குவதில்லை. கழிவுநீர் செல்லும் பல இடங்களில் சுத்தம் செய்வது கிடையாது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே நகராட்சி அலுவலகத்தை பூட்டி போராட்டம் நடத்துகிறேன் என்றார். சுமார் அரை மணி நேரம் போராட்டம் நீட்டித்தது. பின்னர் அன்புமணியிடம் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டார்.

The post நகராட்சி அலுவலகத்தை பூட்டி கவுன்சிலர் போராட்டத்தால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivaganga Municipality 15th Ward ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டம் மறவமங்கலத்தில் மஞ்சுவிரட்டு: ஐகோர்ட் கிளை அனுமதி