×

நீடாமங்கலம் ஒன்றிய புதிய ஆணையர் பொறுப்பேற்பு

நீடாமங்கலம், ஏப்.4: நீடாமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் புதிய ஆணையராக பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுக்கொண்டார். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஆணையராக (வ.ஊ) பாலசுப்பிரமணியன் புதிதாக பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) பிரிவில் பணியாற்றினார். நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள பாலசுப்பிரமணியனை, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.

The post நீடாமங்கலம் ஒன்றிய புதிய ஆணையர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Needamangalam Union ,Needamangalam ,Balasubramanian ,Needamangalam Union Office ,Thiruvarur District ,Needamangalam Panchayat Union Office ,Dinakaran ,
× RELATED கோடை நடவு பயிரில் எலிகளை கட்டுப்படுத்த பறவை தாங்கி