×

திருவாரூரில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருவாரூர், ஏப்.4: திருவாரூரில், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ தலைமையில் நேற்று திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. திமுகவில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து நேற்று முதல் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் துவங்கியது. அதன்படி திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாரூர் வடக்கு வீதியில் நடைபெற்ற திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமினை மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார்.

மேலும் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையினையும் மேற்கொண்டார். கட்சியின் நகர செயலாளர் வாரைபிரகாஷ் மற்றும் தொகுதி பொறுப்பாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் முன்னாள் எம்எல்ஏ அசோகன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் புலிவலம் தேவா, பாலச்சந்தர், கலியபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் செந்தில், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தியாகபாரி, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஜினி சின்னா, மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் அமுதா சந்திரசேகர் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவாரூரில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Tiruvarur ,Poondi Kalaivanan ,MLA ,Dinakaran ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி