×

குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

திருவில்லிபுத்தூர், ஏப்.4: திருவில்லிபுத்தூர் நகர்மன்ற அலுவலகத்தில் நகராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் தங்கம் ரவி கண்ணன் தலைமை வகித்தார். இதில் மேலாளர் பாபு, சுகாதார ஆய்வாளர்கள் ராமச்சந்திரன், சரவணன், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் ராஜேஷ் விமல்தாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், கண்காணிப்பு பணிகள் மற்றும் கவுன்சலிங் ஆகியவை குறித்து கூட்டத்தில் விளக்கப்பட்டது.

The post குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Child Protection Committee ,Thiruvilliputhur ,Protection Committee ,Tiruvilliputhur City Council ,City Council ,Dinakaran ,
× RELATED செங்கல் சூளை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் விநியோகம்