×

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம்

திருவாரூர், ஏப்.4: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 215 மனுக்களை கலெக்டர் சாரு பெற்று குறைகளை கேட்டறிந்தார். திருவாரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் சாரு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்தனர். மொத்தம் 215 கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். மக்கள்குறைதீர் கூட்டத்தில் டி.ஆர்.ஒ சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா, கீர்த்தனா மணி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur Collector ,Tiruvarur ,collector ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி: 7 பேர் காயம்