×

வலியுறுத்தப்பட்டது.மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

கிருஷ்ணகிரி, ஏப்.4: கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், 347 மனுக்கள் குவிந்தன. கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய வீட்டுமனை பட்டா, சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 347 மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில், டிஆர்ஓ ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் அய்யப்பன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post வலியுறுத்தப்பட்டது.மக்கள் குறைதீர் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : People's Grievance Day ,Krishnagiri ,People's Grievance Redressal Day ,District ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்