×

முயல் வேட்டைக்கு சென்ற 4 பேர் கைது

பள்ளிபாளையம்,ஏப்.4: வெப்படை அருகே முயல் வேட்டைக்கு சென்ற 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 2 நாட்டு துப்பாக்கிகளை நேற்று பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (48). இதேபகுதியை சேர்ந்த இவரது நண்பர்களான பிரகாஷ்(48), ரமேஷ்(46), வெங்கடாசலம்(50) ஆகிய 4 பேரும், நேற்று வெப்படை அடுத்த வெள்ளிகுட்டை முனியப்பன் கோயில் பகுதியில் முயல் வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தனர்.

இதுகுறித்து அறிந்த வெப்படை எஸ்ஐ சண்முகம், தலைமை காவலர்கள் முகிலன், சரவணன், கார்த்தி, பிரவீன்குமார் ஆகியோர், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 4 பேரையும் மடக்கி விசாரித்தனர். இதில் முயல் வேட்டைக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 2 நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர்.

The post முயல் வேட்டைக்கு சென்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Pallipalayam ,Webbadai ,Dinakaran ,
× RELATED தனிப்பிரிவு காவலரின் குழந்தைகளுக்கு தங்கம்