×

15 பிடிஓ.,க்கள் இடமாற்றம்

நாமக்கல், ஏப்.4: நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும், 15 பிடிஓக்கள் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 5 துணை பிடிஓக்கள், பதவி உயர்வு பெற்றுள்ளனர். நாமக்கல் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில், கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த குணாளன், கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவு மேலாளராகவும், பரமத்தி பிடிஓ சரவணன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளராகவும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். வெண்ணந்தூர் பிடிஓ மாதவன், திருச்செங்கோடுக்கும், திருச்செங்கோடு பிடிஓ (கிராம ஊராட்சிகள்) டேவிட் அமல்ராஜ், பள்ளிபாளையத்துக்கும், அங்கு பணியாற்றி வரும் மலர்விழி, எலச்சிபாளையத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

நாமகிரிப்பேட்டை பிடிஓ சரவணன், அதே அலுவலகத்தில் கிராம ஊராட்சிக்கும், அங்கு கிராம ஊராட்சியில் பணியாற்றி வரும் சுந்தரம், புதுச்சத்திரத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். புதுச்சத்திரம் பிடிஓ தனம், ராசிபுரம் பிடிஓவாகவும், ராசிபுரம் பிடிஓ பாஸ்கர், நாமக்கல் பிடிஓவாகவும் (கிராம ஊராட்சிகள்), எலச்சிபாளையம் பிடிஓவாக (கிராம ஊராட்சிகள்) பணியாற்றி வந்த தமிழரசி, எருமப்பட்டிக்கும், எருமப்பட்டி பிடிஓ லோகமணிகண்டன், மல்லசமுத்திரத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். மல்லசமுத்திரம் பிடிஓ அருண்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்ட கூடுதல் பிடிஓவாகவும், அங்கு பணியாற்றி வரும் சுகிதா, சேந்தமங்கலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

சேந்தமங்கலம் பிடிஓ அருளப்பன், எலச்சிபாளையத்துக்கும், எலச்சிபாளையம் பிடிஓ புஷ்பராஜன், கபிலர்மலைக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் துணை பிடிஓக்கள் வெண்ணந்தூர் பாலமுருகன், புதுச்சத்திரம் மேகலா, மோகனூர் கீதா, கொல்லிமலை நாகலிங்கம், வெண்ணந்தூர் மலர்விழி ஆகியோர், பிடிஓக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் வெவ்வேறு வட்டாரங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் பிறப்பித்துள்ளார்.

The post 15 பிடிஓ.,க்கள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal District Rural Development Department ,Dinakaran ,
× RELATED நாமக்கல்லில் தொழிலதிபர் வீட்டில் வருமானவரி சோதனை