×

ஜாமீனில் வந்த ரவுடியை வெட்டிய 8 பேர் கைது

சேலம், ஏப்.4: சேலம் கிச்சிப்பாளையம் ரவுடி செல்லத்துரை கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ரவுடியை சரமாரியாக வெட்டிய 8பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். சேலம் கிச்சிப்பாளையம் எஸ்எம்சி காலனியை சேர்ந்தவர் சின்னவர் (23). பிரபல ரவுடியான இவர், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவுடி செல்லத்துரை கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்தார். ஜாமீனில் வெளியே வந்த சின்னவர், ஓமலூரில் வீடு வாடகைக்கு எடுத்து தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கிச்சிப்பாளையம் எஸ்எம்சி காலனியில் உள்ள தனது மாமியார் மாதேஸ்வரியின் வீட்டை புதுப்பிக்கும் பணி நடந்து வருவதால், பெயின்ட் அடிப்பதற்காக சின்னவர், தனது மனைவியுடன் கடந்த 1ம் தேதி வந்துள்ளார்.

அப்போது, கொலையுண்ட செல்லத்துரையின் சித்தப்பா மகன் மொன்னையன் (எ) துரைசாமி, அவரது கூட்டாளிகள் 10 பேர் திடீரென சின்னவரை மறித்து, கத்தியால் சரமாரியாக வெட்டியும், இரும்பு ராடால் தாக்கியும் உள்ளனர். இதில், பலத்த காயமடைந்த சின்னவரை உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த கிச்சிப்பாளையம் உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, இக்கொலை முயற்சியில் ஈடுபட்ட கிச்சிப்பாளையத்தை சேர்ந்த மொன்னையன் அவரது கூட்டாளிகள் குள்ள பிரபு,வாசு, சக்தி, பிரதாப், கோகுல், மோகன், வல்லரசு ஆகிய 8பேரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ஜாமீனில் வந்த ரவுடியை வெட்டிய 8 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Kichipalayam ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை