×

நெகிழி இல்லா தமிழகம், கண் தானம் சைக்கிளில் பிரச்சார பயணம்

பல்லடம்,ஏப்.4:பல்லடத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நெகிழி ஒழிப்பு மற்றும் கண் தானம் பற்றிய விழிப்புணர்வு சைக்கிளில் பிரச்சார பயணம் தொடங்கியது. பல்லடம் சித்தம்பலம் மாகாளியம்மன் கோவிலில் இருந்து சித்தம்பலம் பகுதியை சேர்ந்த தரணி (19) ஆறுமுகம் (50) ராமஜெயம் (70), ரங்கசாமி (63), மகேஸ் (30.) உள்ளிட்டவர்கள் தாராபுரம், மதுரை எட்டையபுரம், வழியாக திருச்செந்தூர் வரை சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். இதனை பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்வில் பல்லடம் ரெயின்போ ரோட்டரி சங்க தலைவர் வாழும் கலை ஆறுமுகம், செயலாளர் இமைக்கள் சுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நெகிழி இல்லா தமிழகம், கண் தானம் சைக்கிளில் பிரச்சார பயணம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Palladam ,Tiruchendur ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம்