×

கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை: பூமலூரில் கால்நடை மருந்தகம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

பல்லடம், ஏப்.4: பல்லடம் ஒன்றியம் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலானவர்கள் விசைத்தறி தொழிலும், விவசாயத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூலிவேலைக்குச் செல்லும் தொழிலாளர்களும் கால்நடை களை வளர்த்து வருகின்றனர். அதன்படி பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் தங்கள் கால்நடைகளுக்கு ஏதேனும் நோய்வாய்ப்பட்டால் பூமலூர் அருகே சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள 63 வேலம்பாளையம் பகுதியில் உள்ள கால்நடை மருந்த கத்திற்கு சென்று சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. தங்கள் கால்நடைகளை 4 கி.மீ நடந்து சென்று சிகிச்சை அளித்து பின்னர் திரும்புகின்றனர்.எனவே பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கால்நடை மருந்தகம் அமைத்துத்தர வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளனர்.

The post கான்கிரீட் தளம் அமைக்க பூமி பூஜை: பூமலூரில் கால்நடை மருந்தகம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Bhumalur ,Palladam ,Poomalur Panchayat ,Palladam Union ,Bhoomi Pooja ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு