×

பணம் தர மறுத்ததால் ஆத்திரம்தம்பி கண்ணெதிரே அண்ணன் மீது டீசல் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற கும்பல்

நெய்வேலி, ஏப். 4: நெய்வேலி அருகே பணம் தர மறுத்ததால் தம்பி கண்ணெதிரே அண்ணன் மீது டீசலை ஊற்றி எரித்துக் கொல்ல முயன்ற வழிப்பறி 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வீராரெட்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன்கள் பாக்கியராஜ் (33), பாண்டிதுரை (30). இருவரும் டிரைவர் மற்றும் விவசாய வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள பம்புசெட்டுக்கு டீசல் வாங்குவதற்கு பைக்கில் நெய்வேலி நகரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்றனர். அங்கு டீசல் வாங்கிக்கொண்டு மீண்டும் வீடு திரும்பினர்.

காப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை மகன் ராகுல் என்கிற தங்கதுரை(23), ரவிச்சந்திரன் மகன் ஸ்டாலின் (22), ரவி மகன் குட்டி என்கிற சஞ்சய் (22) ஆகியோர் சாலையில் நின்று கொண்டு பைக்கில் வந்த அண்ணன், தம்பியை வழிமறித்து 500 ரூபாய் கொடுங்கடா என கேட்டு தகராறு செய்துள்ளனர். ஆனால் இருவரும் பணம் தர முடியாது என மறுத்ததால் அவர்கள் வாங்கி வைத்திருந்த டீசல் கேனை பிடுங்கி பாக்யராஜ் மீது ஊற்றி தீவைத்து கொளுத்த முயன்றுள்ளனர். இதனால் பயந்துபோன பாக்கியராஜ் அங்கிருந்து தப்பித்து ஓடி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் லதா தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுல், ஸ்டாலின், குட்டி ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.தம்பி கண்ணெதிரே அண்ணன் மீது 3 வாலிபர்கள் டீசல் ஊற்றி எரிக்க முயன்ற முயன்ற சம்பவம் நெய்வேலி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பணம் தர மறுத்ததால் ஆத்திரம்
தம்பி கண்ணெதிரே அண்ணன் மீது டீசல் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற கும்பல்
appeared first on Dinakaran.

Tags : Neyveli ,
× RELATED மந்த நிலையில் நடந்து வரும் சாலை...