×

விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

சென்னை : விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி மற்றும் அறந்தாங்கி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் எண்ணப்பட்டன.இந்நிலையில், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்கு எண்ணிக்கையின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள எண்ணுக்கும், ஆவணங்களில் இருந்து எண்ணுக்கும் வித்தியாசம் காணப்பட்டது.

இதனால் பல முறை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதால் விராலிமலை தொகுதியில் முடிவு வெளியாவதில் தாமதம் ஆனது. இருப்பினும் 23வது சுற்று முடிவில் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் 19,044 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பனை விட 23,644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக விராலிமலை தொகுதியில் எனது வெற்றியை அறிவிப்பதில் ஏன் தாமதம் என்று  சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பி இருந்தார். வாக்கு எண்ணிக்கை தொடங்கி 24 மணி நேரத்தை கடந்துவிட்டது என்று ஆதங்கம் தெரிவித்த அவர், 23 சுற்று முடிந்துவிட்டது; 4 மணி நேரமாக முடிவுக்கு காத்திருப்பதாக விரக்தியை வெளிப்படுத்தி உள்ளார். 


Tags : Vijayabaskar ,Minister of Health ,Viralimaya , அமைச்சர் விஜயபாஸ்கர்
× RELATED சொத்து குவிப்பு வழக்கு:...