×

கல்லூரி மாணவன் தற்கொலை

திருவொற்றியூர்: திருவொற்றியூர், சேஷாசலா கிராமணி தெருவைச் சேர்ந்தவர் டேவிட். இவரது மகன் கரண் (19). மாதவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவர், நேற்றுமுன் தினம் இரவு தனது அறைக்கு சென்று, கதவை உள்புறமாக தாழிட்டுக்கொண்டார். வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்ததது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

The post கல்லூரி மாணவன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : David ,Seshasala Gramani Street, Tiruvottiyur ,Karan ,Madhavaram ,
× RELATED பழம் பகைகொண்ட மகரக்கண்ணன்