×

வழிப்பறி செய்த ரவுடி கைது

மாதவரம்: கொடுங்கையூர் முத்தமிழ்நகரை சேர்ந்தவர் ஆனந்த் (29), தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் காலை கொடுங்கையூர் – தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்றபோது, மர்ம நபர் ஒருவர் அவரை மடக்கி கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்து ஆயிரம் ரூபாயை பறித்துச் சென்றார். இதுகுறித்து கொடுங்கையூர் காவல்நிலையத்தில் ஆனந்த் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்த அசார் (எ) அசாருதீன் (29) என்பதும், ரவுடியான இவர்மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை அசாருதீனை கைதுசெய்த போலீசார், அவர்மீது வழக்குப்பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post வழிப்பறி செய்த ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Robber ,Madhavaram ,Anand ,Kodunkaiyur ,Muthami ,Nagar ,Dinakaran ,
× RELATED தண்டையார்பேட்டையில் வீடு புகுந்து ரவுடி வெட்டிக்கொலை: 5 பேருக்கு வலை