×

தனியார் ஊழியரிடம் ரூ.40,000 நூதன மோசடி

புழல்: புழல் அடுத்த விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(50). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய செல்போன் வாட்ஸ்-அப்பில் பான் கார்டு தகவல்களை புதுப்பிக்குமாறு தகவல் வந்தது. இந்த தகவலின் பேரில் சந்திரசேகர் செல்போனில் வந்த இணைப்பில் இவருடைய பான் கார்டை புதுப்பித்தார்.

சிறிது நேரத்தில் இவருடைய கிரெடிட் கார்டில் இருந்து நூதன முறையில் ரூ.40,000 எடுக்கப்பட்டது என, இவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சந்திரசேகர், இதுகுறித்து புழல் குற்றப்பிரிவு போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post தனியார் ஊழியரிடம் ரூ.40,000 நூதன மோசடி appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Chandrasekhar ,Vinayakapuram ,Chennai ,Dinakaran ,
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...