×

ஐநா சபையில் உரையாற்றிய சமூக ஆர்வலருக்கு வரவேற்பு

கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் எம்.எல்.ராஜேஷ். இவர் காந்தி உலக மையம் என்கிற அமைப்பை நிருவி காந்திய கொள்கைகளை பரப்பி வருவதோடு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளையும், உலக சாதனை நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றார். இந்நிலையில், சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் உள்ள ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையத்தின் 52வது கூட்டம் கடந்த வாரம் ஞாயிற்று கிழமை நடந்தது. இதில், மன மாசு தான் அனைத்து மாசுபாட்டிற்கும் மூல காரணம் என்கிற தலைப்பில் ராஜேஷ் உரையாற்றினார்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டிக்கு நேற்று முன்தினம் வந்த ராஜேஷை, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன், சமூக சேவகர் கிளமெண்ட் உள்ளிட்டோர் வரவேற்று மேள தாளத்தோடும், மயிலாட்டத்தோடும் அவரை வரவேற்று வீட்டிற்கு அழைத்து சென்றனர். ராஜேஷிற்கு கும்மிடிப்பூண்டியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

The post ஐநா சபையில் உரையாற்றிய சமூக ஆர்வலருக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : UN Assembly ,Kummidipoondi ,Rajesh ,Pudukumdipoondi ,Gandhi World Center ,Gandhi ,
× RELATED இன்னொரு முறை பாஜ ஜெயித்தால் தேர்தல்...