ஆலந்தூர்: ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்-காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் அவர்கள் 1,16,785 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் வளர்மதியை 40,571 வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார். காஞ்சிபுரம் பொன்னேரிகரை அருகே அமைந்துள்ள அண்ணா பல்கலைகழகம் வாக்கு எண்ணும் மையத்தில் தான் வெற்றி பெற்ற சான்றிதழை ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன் அவர்கள் ஆலந்தூர் தொகுதி தேர்தல் அலுவலரும்-வருவாய் கோட்டாச்சியரும்மான சைலேந்திரனிடம் பெற்றார்.