×

புதுமண தம்பதி வீட்டில் 12 சவரன் நகை திருட்டு

பெரம்பூர்: புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (32). இவர் ஓட்டேரி மங்களபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கு திருமணமானது. இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் தனது உறவினரின் வீட்டு விருந்துக்குச் சென்றுவிட்டு, மாலை 6 மணியளவில் பெருமாள் தனது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்த நிலையில் இருந்துள்ளது. இதனால், லாக்கரை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 12 சவரன் தங்க நகைகள் திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து பெருமாள் பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் அழகேசன் மற்றும் கைரேகைப் பிரிவு உதவி ஆய்வாளர் புனிதா உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் இருந்ததால் பெருமாளுக்கு நன்கு தெரிந்தவர்கள் யாரோ இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.

The post புதுமண தம்பதி வீட்டில் 12 சவரன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Perambur ,Perumal ,Pulyanthoppu KP Park ,Otteri Mangalapuram ,
× RELATED ஆவடி அடுத்த கோவில்பதாகையில் தனியார்...