- அமைச்சர் நாசர்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- பொன்னேரி
- திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
- மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கிழக்கு
- தின மலர்
பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, கிழக்கு ஒன்றிய செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஏற்பாட்டிலும், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் தலைமையிலும், தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மாநில பிரச்சார குழு செயலாளர் சேலம் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு விதவை தாய்மார்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சாலையோர கடை வியாபாரிகள், தீப்பிடித்து எரிந்த குடும்பங்கள், மீன் வியாபாரிகள் உள்ளிட்ட 2500 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையினான, தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில், மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் சி.எச்.சேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, பொன்னேரி பாஸ்கர் சுந்தரம், அன்புவாணன் கன்னிகை ஸ்டாலின், மாவட்ட நிர்வாகிகள் பகலவன், கதிரவன், வெங்கடாஜலபதி, மீஞ்சூர் சுப்பிரமணி, குணசேகரன், ருக்மணி மோகன்ராஜ், ஒன்றிய செயலாளர் வைழுதிகை செல்வசேகரன், காணியம்பாக்கம் ஜெகதீசன், மணிபாலன், நகர செயலாளர் ருக்குமணி மோகன்ராஜ், ஆரணி முத்து, மோகன்ராஜ், இளங்கோ, நக்கீரன், ஆனந்தகுமார், மோகன்பாபு, கண்ணதாசன் ராஜேந்திரன், வல்லூர் தமிழரசன், பொன்னேரி ராஜா, அத்திப்பட்டு கதிர்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் 2500 ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் நாசர் வழங்கினார் appeared first on Dinakaran.