×

சேற்றில் சிக்கி 2 யானைகள் பலி

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனச்சரகத்திற்குட்பட்ட கோடுப்பட்டி வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த யானைகள் இரு தினங்களுக்கு முன்பு சின்னாற்றுக்கு தண்ணீர் குடிப்பதற்காக சென்றுள்ளன. அப்போது, 8 வயது கொண்ட பெண் யானை ஒன்று, சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதேபோல், போடூர் வனப்பகுதியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு சம்பவங்களில் 6 யானைகள் உயிரிழந்துள்ளது.

The post சேற்றில் சிக்கி 2 யானைகள் பலி appeared first on Dinakaran.

Tags : Pennagaram ,Kodupattti forest ,Okenakal forest ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED ஒகேனக்கல்லுக்கு திடீரென 2500 கனஅடியாக...