×

பள்ளியில் படித்து வந்த மகளை கடத்தி திருமணம் தாய் தீக்குளித்து தற்கொலை

அய்யலூர்: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகேயுள்ள முத்தம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் கடந்த 1ம் தேதி வடமதுரை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று, தனது மகன் அருண்குமாருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு பாண்டியனின் மனைவி ஜானகி மற்றும் உறவினர்கள் உடந்தையாக இருந்துள்ளனர். மகளை கடத்தி சென்று திருமணம் செய்ததால் மனமுடைந்த மாணவியின் தாய் தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி நேற்று முன்தினம் தீக்குளித்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை கடத்திய பாண்டியனின் உறவினர்களான சிவசக்தி (40), ராஜம்மாள் (37) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான பாண்டியன், அவரது மனைவி ஜானகி, மகன் அருண்குமாரை தேடி வருகின்றனர்.

The post பள்ளியில் படித்து வந்த மகளை கடத்தி திருமணம் தாய் தீக்குளித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Ayalur ,Pandiyan ,Kutthambatu ,Gujiliyampara, Dintugul District ,Vadamadurai ,
× RELATED தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக...