×

பஸ் மீது லாரி மோதி மூன்று பெண்கள் பலி

திருப்புவனம்: அரசு பஸ் மீது லாரி மோதி 3 பெண்கள் பலியாகினர். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் இருந்து மதுரைக்கு நேற்று காலை அரசு பஸ் புறப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே குயவன்குளம் பகுதியில் அந்த பஸ் மீது எதிரே வந்த செங்கல் லாரி நேருக்கு நேர் மோதியது. இதில் பஸ்சின் முன்புறம் பலத்த சேதமடைந்தது. லாரி சாலையோரம் கவிழ்ந்தது. பஸ்சில் வந்த ஆர்.எஸ்.மங்கலம் அருகே கீழக்கோட்டையை சேர்ந்த மூதாட்டி திருப்பதி (60), மதுரை தனியார் மருத்துவமனை நர்ஸ் கங்கா (23) , நாகஜோதி (45) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். பஸ் டிரைவர் திருப்புவனம் ஈஸ்வரன் (44), கண்டக்டர் சிவகங்கை சந்திரன் (50), இறந்த மூதாட்டியின் கணவர் கொந்தசாமி (65), லாரி டிரைவர் பாலமுருகன் (50) உட்பட 6 பேர் காயத்துடன் சிகிச்சை பெறுகின்றனர்.

The post பஸ் மீது லாரி மோதி மூன்று பெண்கள் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruppuvanam ,Ramanathapuram district ,Thondi ,Madurai ,Dinakaran ,
× RELATED சஸ்பெண்ட் செய்யப்பட்ட செயல் அலுவலர் மீது நிதி முறைகேடு வழக்கு