×

குளிர்பானத்தில் விஷம் கலந்து 2 குழந்தைகளை கொன்ற தாய்

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கோட்டை தெருவை சேர்ந்தவர் யமுனா (30). இவரது கணவர் மகேஷ். இவர்களது மகள்கள் யோகிதா (5), யாஷிகா(2). தற்போது மகேஷ் பெங்களூருவில் தங்கியிருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இதனால் யமுனா 2 பெண் குழந்தைகளுடன் பெரியாங்குப்பத்தில் உள்ள தாய் வீட்டில் வசிக்கிறார். நேற்று ஜூஸ் பாட்டிலில் விஷம் கலந்து 2 குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு, யமுனாவும் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். மருத்துவ மனையில் பரிசோதித்த டாக்டர்கள் இரு பெண் குழந்தைகளும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து யமுனாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post குளிர்பானத்தில் விஷம் கலந்து 2 குழந்தைகளை கொன்ற தாய் appeared first on Dinakaran.

Tags : Ampur ,Yamuna ,Periyankuppam Fort Street ,Tirupathur district ,Mahesh ,
× RELATED தேர்தல் பணி முடிந்து சென்ற பெண் ஏட்டு விபத்தில் பலி