×

போதையில் தகராறு தடுக்க சென்ற வாலிபர் பரிதாப பலி

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பகுதியில், மரு அருந்தியபோது, நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், தடுக்க சென்ற வாலிபர் பரிதாபமாக பலியானார். வாலாஜாபாத் நேரு நகரை சேர்த்தவர் வினித்குமார் (27). பேரூராட்சி அலுவலகத்தில் டெங்கு தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர், சக நண்பர்களான பிரியதர்ஷன் (22), பார்த்திபன் (25). ஆகியோருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது, பிரியதர்ஷன், பார்த்திபனுக்கும் இடையே திடீரென வாய் தகராறு ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறியது. இதனால் ஆத்திரமடைந்த பிரியதர்ஷன், கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து, பார்த்திபனை குத்த முயன்றுள்ளார். அப்போது, இதைதடுக்க சென்ற வினித்குமார் கழுத்தில் பீர்பாட்டில் குத்தியது.

இதில், பலத்த காயமடைந்து வினித்குமாரை, பிரியதர்ஷன், பார்த்திபன் ஆகிய 2 பேரும், மீட்டு வாலாஜாபாத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, வினித்குமாரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த வாலாஜாபாத் போலீசார், பிரியதர்ஷனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், நேரு நகர் பகுதியில் பிரச்னைகள் ஏற்படாத வண்ணம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post போதையில் தகராறு தடுக்க சென்ற வாலிபர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Wallajahabad ,Wallajabad ,Walajahabad ,
× RELATED வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில்...