×

தொழில் முனைவோர், காப்பீட்டாளர்களுக்கு வரும் 12ம் தேதி குறைதீர் முகாம்: இஎஸ்ஐசி அறிவிப்பு

சென்னை: தொழில் முனைவோர், காப்பீட்டாளர்களுக்கு வரும் 12ம் தேதி குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து இ.எஸ்.ஐ.சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாமை தொழில் முனைவோர், காப்பீட்டாளர் போன்ற இ.எஸ்.ஐ பயனாளிகளுக்காக வரும் 12ம் தேதி (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணியளவில் நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் ரோடு, தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம், மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. எனவே அனைத்து பயனாளிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களின் குறைகளுக்கு தீர்வு காணலாம்.

The post தொழில் முனைவோர், காப்பீட்டாளர்களுக்கு வரும் 12ம் தேதி குறைதீர் முகாம்: இஎஸ்ஐசி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Grievance ,Camp ,ESIC ,Chennai ,Kuradithir ,Dinakaran ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு