×

மயிலாடுதுறை எஸ்.பி.க்கு கொரோனா

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, பூம்புகார், சீர்காழி ஆகிய 3சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
வாக்கு என்னும் மையங்களுக்கு செல்லும் அலுவலர்கள், பத்திரிகையாளர்கள், கட்சி முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இவர்களில் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீ நாதாவுக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். இவர், கொரோனா தடுப்பூசி இரண்டு முறை செலுத்தி கொண்டுள்ளார் என்பதும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கு முன்பாகவே ஒருமுறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags : Mayiladuthurai , Corona to Mayiladuthurai SP
× RELATED தேர்தலின்போது வாக்குச்சாவடி...