×

பரமக்குடி அருகே 92 வயது மூதாட்டியை அடித்து கொன்று நகைகள் கொள்ளை: தோடுக்காக காதுகளை அறுத்த கொடூரம்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி காளிமுத்தம்மாள் (92). கணவர் இறந்து விட்டார். 2 மகன்களும் திருமணமாகி தனியே வசித்து வருகின்றனர். காளிமுத்தம்மாள் தனது வீட்டருகே உள்ள தென்னந்தோப்புக்கு தினமும் சென்று வருவது வழக்கம். நேற்று மதியம் வழக்கம்போல் தென்னந்தோப்பிற்கு சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அவரது வாயை பொத்தி அருகில் உள்ள மோட்டார் அறைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை தாக்கி, நகைகளை கழற்றித் தருமாறு மிரட்டினர். அதற்கு காளியம்மாள் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், அவரது தலையை பிடித்து சுவற்றில் சரமாரியாக முட்ட வைத்தனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் அவர் அணிந்திருந்த 18 பவுன் நகைகளை கழற்றினர். தோடுகளை கழற்ற முடியாததால் அவரது காதோடு அறுத்து கழற்றி சென்றனர்.

நீண்ட நேரமாகியும் காளிமுத்தம்மாள் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் தோப்புக்கு சென்று பார்த்தனர். அங்கு மோட்டார் அறைக்குள் அவர், ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக், பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Parramatta , 92-year-old woman beaten to death near Paramakudi, jewelery robbery: Atrocities to pierce ears
× RELATED பரமக்குடி அருகே அரசு மேல்நிலைப்பள்ளி...