சென்னை:. தமிழகத்தில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. கொரோனா பரவல் மற்றும் தேர்தலை காரணம் காட்டி இந்த கூட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நாளை (மே 1ம் தேதி) நடைபெறும் கிராம சபை கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஊராட்சி இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில்,”தமிழகத்தில் கொரோனாபரவல் அதிகரித்துள்ள நிலையில் கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.