×

கொரோனா நோயாளிகளுக்கான 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா நோயாளிகளை அழைத்து செல்ல பணிக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை 240ல் இருந்து 351ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1303 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதில் கொரோனா நோயாளிகளுக்காக 210 அவசர ஊர்திகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கொரோனா பணிக்காக ஒதுக்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள் எண்ணிக்கை 351ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் தினசரி சுமார் 5,200 நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக 2,500 கொரோனா நோயாளிகள் பயனடைந்து வருகிறார்கள். கொரோனா நோயாளிகளின் அதிகரிப்பால் தேவைக்கேற்ப அவசர ஊர்திகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கோவிட் கன்ட்ரோல் ரூம் என்ற தனி கட்டுப்பாட்டு சேவையும் அமைக்கப்பட்டுள்ளது. 044-40067108 என்ற தொலைபேசி எண்களுக்கு மக்கள் தொடர்பு கொள்ளலாம்.



Tags : 108 Ambulance
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி...