×

சோழவரம் பகுதியில் பரபரப்பு; மாணவியை கடத்திச் சென்று 2 மாதம் பாலியல் பலாத்காரம்: தனியார் நிறுவன ஊழியர் போக்சோவில் கைது

பொன்னேரி: சோழவரம் பகுதியில் திருமண ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்று குடும்பம் நடத்துவதாக இரண்டு மாதம் பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சோழவரம் அத்திப்பேடு கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் சரத் (22). தனியார் கம்பெனி ஊழியர்.  இவர் அதே பகுதியைச் சேர்ந்த வீரவேலின் 16 வயது மகளிடம் நட்பாக பழகி வந்துள்ளார். அந்த சிறுமி அப்பகுதியில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், மாணவியிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசைவார்த்தைக்கூறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சரத் கடத்தி சென்றுள்ளார்.

பின்னர், ஒரு கோயிலில் வைத்து தாலி கட்டி செங்குன்றம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தியுள்ளார். அப்போது, சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில், தன்னுடைய மகளைக் காணவில்லை என சோழவரம் போலீசில் வீரவேல் புகார் அளித்திருந்தார். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த சரத், எங்கள் வீட்டு சம்மதத்தோடு நிகழ்ச்சி நடத்தி உன்னை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகிறேன் என கூறி கடந்த பிப்ரவரி மாதம் யாருக்கும் தெரியாமல் மாணவியை ஊரில் கொண்டுவந்து விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார். பின்னர் வரவில்லை. இந்நிலையில், சரத்துக்கு கடந்த வாரம் அவரது பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனைத் தெரிந்துகொண்ட வீரவேல் குடும்பத்தினர் சென்று கேட்டபோது, உனது மகளை திருமணம் செய்துகொள்ள முடியாது என கூறிவிட்டனராம். இதனையடுத்து, தனது மகளிடம் ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சரத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரவேல், பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் (பொ) அன்னை மகிதா கிறிஸ்டி விசாரணை நடத்தி, செங்குன்றம் பகுதியில் பதுங்கி இருந்த சரத்தை பிடித்து வந்து விசாரணை நடத்தினார். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து சரத் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தார். பின்னர், சரத்தை போலீசார் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Tags : Cholavaram ,Pokcho , Unrest in the Cholavaram area; Student abducted and raped for 2 months: Private company employee arrested in Pokcho
× RELATED துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு