சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர்கள் நாட்டின் முதுகெலும்பு. அவர்களின் உழைப்பே நாட்டின் வளர்ச்சி. அவர்களுடைய வாழ்தாரம், பாதுகாப்பு, தொடர் வளர்ச்சி போன்றவற்றை மனதில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் அக்கரையோடு செயல்பட்டு அவர்களுடைய முன்னேற்றதிற்கும், நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சியையும் உயர்த்த கூடிய நல்ல நிலையை மேற்கொள்ள வேண்டும்.
கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் நலன் கருதி, நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்கினை அறிந்து, அவர்களுடைய பல நீண்டகால கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் கனிவோடு பரிசீலனை செய்து தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும். தொழிலாளர் அனைவருக்கும் என் இனிய மே தின நல் வாழ்த்துக்கள். என கூறியுள்ளார்.