×

6 மாவட்டங்களில் உச்சம் எடுக்கும் கொரோனா: 6 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தலைமைச் செயலாளர் ஆலோசனை

சென்னை: கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 6 மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தேனி, திருப்பூர் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை தாண்டியது. திருமணம், திருவிழா, துக்க நிகழ்வுகள் போன்றவற்றில் பங்கேற்பவர்கள் முகக் கவசம் அணியாததாலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காததாலும் மீண்டும் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆகவே பொதுமக்கள் முகக்கவசம் அணியும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அரசு அறுவுறுத்தி வருகிறது.


Tags : Corona ,Chief Secretary , Corona, with collectors, chief secretary, consultation
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...