×

பாகிஸ்தான் நிலநடுக்கத்தில் 3 குழந்தைகள் பலி

பலுசிஸ்தான்: ஈரான் நாட்டின் எலையில் அமைந்துள்ள பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 குழந்தைகள் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நேற்று மாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் 5.60 ரிக்டர் அளவாக பதிவாகி இருந்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த பலுசிஸ்தான் முதல்வரின் செய்தித் தொடர்பாளர், ‘நிலநடுக்க பாதிப்பால் இறந்த 3 குழந்தைகளும் 8 முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள். மண் வீடுகள் இடிந்து விழுந்த போது, வீட்டிற்குள் சிக்கியிருந்த 3 குழந்தைகளும் இறந்தனர்’ என்றார். கடந்த மாதம் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 9 பேர் பலியாகினர், 150 பேர் படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பாகிஸ்தான் நிலநடுக்கத்தில் 3 குழந்தைகள் பலி appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Balochistan ,Iran ,Dinakaran ,
× RELATED ஈரானில் போர் பதற்றம் நிலவும் நிலையில்,...