×

வேகமெடுக்கும் கொல்லுயிரி வைரஸ்!: புதுச்சேரியில் 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. 110 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று என்பது தீவிரமாக பரவி வருகிறது. இன்று இதுவரை இல்லாத அளவாக 1254 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உயர்ந்தபட்ச அளவாக உள்ளது. தொடர்ந்து 3வது நாளாக இன்று மேலும் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 


மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது. இதில் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில், ஒப்பளம், முதலியார்பேட்டை, ராஜ்பவன், நெல்லித்தோப்பு உள்ளிட்ட 7 சட்டமன்ற தொகுதி முகவர்களுக்கான பரிசோதனை என்பது நடைபெற்றது. இந்த பரிசோதனை சரியாக முறைப்படுத்தப்படாததால் முகவர்கள் கூட்டமாக குவிந்தனர். இந்த நிலையில், 300 முகவர்களில் 110 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 


மீதமுள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமடைந்த சுகாதாரத்துறை ஊழியர்கள், அனைத்து முகவர்களையும் முகக்கவசம் அணியும்படியும், சமூக இடைவெளியை விட்டு நிற்க கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போலீசார் வரவழைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதேபோன்ற நிலையே பல்வேறு பகுதிகளிலும் நீடித்து வருகிறது. 



Tags : Pondicherry, Agent, Corona
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...