×

அசாம் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளை மத்திய அரசு செய்யும்: பிரதமர் மோடி உறுதி

டெல்லி: அசாம் மாநிலத்தில் இன்று காலை 7.51 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக உயர்ந்துள்ளது. சோனித்பூரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மாநிலத்தின் சில பகுதிகளிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.  நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. மேற்கு வங்க மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்கள், மற்றும் சில வடகிழக்கு மாநிலங்கள், பூடான் நாட்டிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. 


 நிலநடுக்கத்தால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. பயங்கர நிலநடுக்கம் குறித்து மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவாலுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாரக உள்ளோம் என மோடி உறுதி அளித்தார். அதேபோல் அசாம் மாநிலம் விரைந்து பழைய நிலைக்கு மாறும் எனவும் அதற்காக நான் இறைவனை வேண்டுகிறேன் என கூறினார்.



Tags : Central government ,Assam ,PM Modi , அசாம் ,உதவிகளை,மத்திய அரசு, பிரதமர் மோடி
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...