×

கொரோனா பரவல் எதிரொல் பிஎஸ்என்எல் சேவை நேரம் குறைப்பு: நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னையில் வரும் மூன்று நாட்களுக்கு (மே 1ம் தேதி வரை) பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தான் செயல்படும் பி.எஸ்.என்.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் வி.கே.சஞ்சீவி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவுவதாலும், தமிழக அரசால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும், பிஎஸ்என்எல் நிர்வாக பிரிவுகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர் சேவை மையங்கள் காலை 10 முதல் 1 மணி வரை வரும் மே 1ம் தேதி வரை செயல்படும். வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவைகளுக்கான ஆன்லைன் முறைகளை பெறவும், எங்கள் டிஜிட்டல் தளத்தை பயன்படுத்தி லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் மொபைல் போஸ்ட்பெய்ட் பில்களை செலுத்தவும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Tags : Corona , Corona Spread Echo BSNL Service Time Reduction: Admin Notice
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...