இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர் ‘யார்க்கர் கிங்’ நடராஜனுக்கு முழங்கால் மூட்டு காயத்துக்காக அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின்போது ஏற்பட்ட இந்த காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நடராஜன், நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 2 லீக் ஆட்டத்தில் மட்டுமே விளையாடியது குறிப்பிடத்தக்கது. அறுவைசிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில்... இதற்கு ஏற்பாடு செய்த கிரிக்கெட் வாரியம், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தான் குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.